23.வட கொரியா
நமக்கு தான் வெட்ட ,வெட்ட எதிரிகள் முளைத்து வருகிறார்கள் என்று பார்த்தால் வல்லரசு அமெரிக்காவுக்கே சதாம் ,ஒசாமா ,தாலிபானைகளை முடித்து விட்டு வரும் முன்னே வட கொரியா என்று ஒரு வம்பன் எதிரி முளைத்து வந்திருக்கிறான் ,முதலில் தென் கொரியா ,ஜப்பான் நாடுகளுக்கு மட்டுமே ஆபத்தாக பார்க்கப்பட்ட வட கொரியாவின் ஏவுகணை வரம்புகள் இன்று அமெரிக்கா வரை நீண்டு உலக வல்லரசு அமெரிக்காவுக்கே பெருந்தலைவலியாக மாறியிருக்கிறது.சுண்டக்காய் வட கொரியாவின் அலம்பல்கள் ரசியாவை இரண்டாம் உலக காலத்து பழைய கதைத்தலைவர்களான ஜெர்மனி,இங்கிலாந்து ,பிரான்ஸ் நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.வெகு விரைவில் ரசியாவும் பனிப்போர் காலத்து பழைய கதைத்தலைவன் என்று அழைக்கப்படடால் வியப்பில்லை .வருங்கால வல்லரசு என்று மார்தட்டிக்கொண்ட சீனாவும் அமெரிக்கா -வடகொரியா என்று கதை மாறிக்கொண்டதால் பல்கலைக் கடித்துக்கொண்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.எப்படியோ நமக்கு மட்டுமல்ல வலிமை வாய்ந்த அமெரிக்காவுக்கே பிரச்சனைகள் இருக்கின்றன என்று நிம்மதிப் பட்டுக்கொள்ளலாம்.
Comments
Post a Comment