13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2
இப்படி தமிழ் நாட்டில் புதிய 10 மாவட்ட்ங்களை உருவாக்கிவிட்டு.அதன் பின்னர் மக்கள் தொகை மற்றும் கோரிக்கைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டும் 5-10 புதிய மாவட்ட்ங்களை உருவாக்க வேண்டும்.புதிய மாவட்ட்ங்களால் வேலை வாய்ப்பு கொடுவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.அதனால் தான்.தெலுங்கானாவில் புதிய மாவட்ட்ங்களுக்கான அறிவிப்புகள் வெளியி ட பட்டுள்ளன.புதிய மாவட்ட்ங்களை உருவாக்குவதால் புதிய வளர்ச்சியடைந்த நகரங்கள் கிடைக்கும்.நகரங்கள் தான் அரசுக்கு வருமானத்தை.அள்ளிக்கொடுப்பன என்பதை மறந்து விட வேண்டாம்.தெலுங்கானாவில் வருவாயை கூட்டுவதற்காக மாவட்ட்ங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தெலுங்கானாவின் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி அப்படி பார்த்தால் 62 மாவட்ட்ங்கள் இருக்க வேண்டும்.ராமதாஸ் சொன்னதை விட 2 அதிகம்.இப்பொழுது விளங்குகிறதா ஏன் தெலுங்கானா முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தில உள்ளது என்று எந்நேரமும் தெலுங்கானாவின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் முதல்வர் இருப்பதால் தான்.
Comments
Post a Comment