12.சாதி பிரச்னை
இது எல்லா இடங்களிலும் உள்ளதுதான் ,தமிழ் நாட்டின் தர்மபுரியில் சாதி பிரச்னை உள்ளது .ஆனால் பெங்களூருக்கு வேலை தேடி செல்லும் தமிழர்கள் அனைவரும் கன்னடர் களுக்கு தமிழர்கள் தான்.காவிரி பிரச்னை வரும் பொது யாரும் அந்த சாதி காரனை அடித்தான்.இந்த சாதி காரனை அடித்தான் என்று சும்மா இருப்பதில்லை.எல்லாரும் இணைந்து தான் போராடுகிறார்கள்.காவிரி நீரால் பயன் பெறாத தென்மாவடத்தினர் கூட காவிரிக்காக போராடுகிறார்கள். 4 பேர் இருக்கும் வெட்டுக்குள்ளேயே அடிதடிகள் பிரச்சனைகள் இருக்கும் பொது 50 லட்ச்சம் தமிழர்கள் இருக்கும் ஈழ த் தமிழர்களுக்குள் பிரச்னை இருப்பதில் வியப்பில்லை.இதை களைய வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய வாதிகளுக்கு உள்ளது.ஈழம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது சாதி பிரச்னை இருக்கவில்லை.
Comments
Post a Comment